இலங்கையில் 2027 ஆம் ஆண்டு முதல் சொத்து வரியை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, குறித்த வரி முறை 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியம், இலங்கை குறித்த அதன் சமீபத்திய அறிக்கையில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளது. புதிய சொத்து வரியை செயல்படுத்த தேவையான ஆரம்ப நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் தரவு சேகரிப்பில் சிறிது தாமதம் இருந்தாலும், செயல்முறை செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என்று சர்வதேச நாணய நிதியம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
அதற்கமைய, சொத்து மதிப்புகளை மதிப்பிடுவதற்கும் வரிகளைக் கணக்கிடுவதற்கும் ஒரு டிஜிட்டல் தரவுத்தளம் உருவாக்கப்பட உள்ளது.
மேலும் 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து தொடர்புடைய தரவுகளும் தயாரிக்கப்பட்டு இறுதி செய்யப்பட வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2027 ஆம் ஆண்டில் இந்த புதிய வரியை செயல்படுத்துவதற்கு சொத்து வரி முறைகள் குறித்த ஒரே நேரத்தில் விவாதங்கள் அவசியம் என்று சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.