வவுனியாவில் மழை பெய்வதை தொடர்ந்து நன்றி செலுத்தும் முகமாக பொங்கல் விழா!!

351

kulam

வவுனியாவில் அண்மைக்காலமாக மழை பெய்யாமல் கடும் வறட்சி நிலவி வந்த நிலையில் அண்மை நாட்களாக தொடர்ந்து மழை பெய்துவருகின்றது. இதனை அடுத்து இதற்கு நன்றி செலுத்தும் முகமாக பொங்கல் நிகழ்வு ஒன்று வவுனியா நகர மீனவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் (18.08) வவுனியா குடியிருப்பு குளத்தருகில் இடம்பெற்றுள்ளது.

குளத்தருகில் நான்கு பொங்கல் பானைகள் வைக்கப்பட்டு விசேட பூசைகள் இடம்பெற்று பிரதான கும்பம் குளத்தினுள் விடப்பட்டதை தொடர்ந்து 3 மணித்தியாலங்கள் மழை பெய்ததை தொடர்ந்து அங்கு நின்றவர்களின் முகங்களில் மகிழ்ச்சி காணப்பட்டது.