
2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று நள்ளிரவு பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிட்டிருந்த நிலையில்,
வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தில் தமிழ் மொழி மூல பரீட்சையில் 23 மாணவர்கள் 9ஏ சித்திகளையும் ஆங்கிலம் மொழி மூல பரீட்சையில் 11 மாணவர்கள் 9ஏ சித்திகளையும் என மொத்தமாக 34 மாணவர்கள் 9ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.
மேலும் தமிழ் மொழி மூல பரீட்சையில் 17 மாணவர்கள் 8ஏ சித்திகளையும் ஆங்கிலம் மொழி மூல பரீட்சையில் 3 மாணவர்கள் 8ஏ சித்திகளையும், தமிழ் மொழி மூல பரீட்சையில் 14 மாணவர்கள் 7ஏ சித்திகளையும் பெற்றுள்ளனர்.
மிகுந்த அர்ப்பணிப்புடன் செயலாற்றி வழிப்படுத்திய ஆசிரியர்கள், அதிபர் ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்கள், வழிகாட்டல்களை வழங்கிய கல்வியதிகாரிகள் அனைவருக்கும் நன்றிகலந்த வாழ்த்துகளை பாடசாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.






