தென்னிலங்கையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பெண்!!

478

மாத்தறை பொலிஸ் பிரிவில் உள்ள பகுதி ஒன்றுக்கு செல்லும் பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மாத்தறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து நேற்று இரவு சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

கண்டெடுக்கப்பட்ட சடலம் 40 முதல் 45 வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணின் சடலம் என்றும், அவரது அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் சுமார் 5 அடி உயரம் கொண்டவர் என்றும், கருப்பு மற்றும் மஞ்சள் நிற ஆடை அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விடயம் குறித்து மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.