கடலில் மூழ்கிய இரு வெளிநாட்டுப் பிரஜைகள் மீட்பு!!

586

மிரிஸ்ஸ கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இரண்டு வெளிநாட்டுப் பிரஜைகள் கொடவில பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) காலை இடம்பெற்றுள்ளது. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவனும் 17 வயதுடைய யுவதியுமே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் மிரிஸ்ஸ கடலில் நீராடிக்கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கியுள்ளனர். இதன்போது அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த கொடவில பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர், கடலில் மூழ்கிய இரு வெளிநாட்டுப் பிரஜைகளையும் காப்பாற்றி அவர்களுக்கு முதலுதவி அளித்துள்ளனர்.