
இந்தியாவை சேர்ந்த நபரொருவர், தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றதைக் கொண்டாடும் விதமாக 40 லீற்றர் பாலில் குளிக்கும் வகையில், வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
இந்தியாவின் அசாம் மாநிலத்தின் நல்பாரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணிக் அலி என்பவரே தனது விவாகரத்தை இவ்வாறு கொண்டாடியுள்ளார்.
மாணிக் அலி பாலில் குளித்தவாறு “நான் விடுதலையாகிவிட்டேன்” எனக் கூறி வெளியிட்டுள்ள இந்த காணொளி 3 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.
அவரின் இந்த செயலை சிலர் பாராட்டி வருவதுடன், ஏனையோர் பாலை வீணடித்ததாக அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.





