தமிழ் இனத்தை சிதைக்கவே சிங்கள குடியேற்றங்கள் தொடர்கின்றன : செல்வம் அடைக்கலநாதன்!!

611

Adaikalanaathan

தமிழ் இனத்தை சிதைக்கவே தமிழ் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்கள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா பெரியபுளியங்குளம் கிராமத்தில் 300 சிங்கள குடும்பங்கள் குடியேற்றம் செய்யப்படுவதாகவும் அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்து அவர் வெளியிட்டள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் அறிக்கையில் மேலும் தெரிவத்துள்ளதாவது..

வவுனியாவில் அண்மைக்காலமாக பல தமிழ் கிராமங்களில் சிங்கள் குடும்பங்கள் குடியேற்றப்பட்டு தமிழ் மக்கள் மத்தியில் இன சிதைப்பை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த வகையில் தமிழ் மக்கிளன் பூர்வீக கிராமமான கள்ளிக்குளத்திற்கு அருகாமையில் உள்ள பெரிய புளியங்குளத்தில் 300 சிங்கள் குடும்பங்களை குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இக் கிராம மக்கள் பல்வேறு இடப்பெயர்வுகளை சந்தித்து இன்று பல இடங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். அது மட்டுமன்றி அவர்களின் பல விவசாய நிலங்களும் இப் பகுதியில் உள்ள நிலையில் இக் குடியேற்றம் இடம்பெறுக்கின்றது.

இவ்வாறான நடவடிக்கைகளுக்கு அரசினால் வவுனியா மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள அரச உயரதிகாரிகள் துணை போய்க்கொண்டுள்ளனர். இவ்வாறான தமிழ் கிராமங்களில் மேற்கொள்ளப்படும் குடியேற்றங்கள் எமது இனத்தின் மீது ஏவி விடப்பட்டுள்ள இனச் சிதைப்பாகவே கருதுகின்றேன்.

அரசும் அவர்களின் செல்லப்பிள்ளைகளான அமைச்சர்கள் சிலரும் தமது சமூகம் சார்ந்த நன்மைகளையே பார்வையிட்டுக்கொண்டிருக்கின்றனர். அந்த வகையிலேயே தற்போது குடியேற்றம் செய்யப்படும் பெரியபுளியங்குளம் கிராமத்திலும் வீதிகள் வீட்டு வசதிகள் என அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றது.

எனினும் அருகில் உள்ள கள்ளிக்குளத்தில் கடந்த 4 வருடங்களாக மீள்குடியேறியுளள் தமிழ் மக்களுக்கு எவ்வித அடிப்படை வதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. இவ்வாறான செயற்பாடுகளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.