
வவுனியா புகையிரத நிலையத்தில் தொடரூந்தில் மோதுண்டு நேற்று (16.07) இரவு ஒருவர் பலியாகியுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்திலேயே குறித்த நபர் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
இம் மரணம் தற்கொலையா அல்லது விபத்தா என்ற மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.






