பேருந்துகள் நேருக்குநேர் மோதி பாரிய விபத்து : 21 பேர் காயம்!!

457

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்தும் மோதியதில் கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. கேகாலை – கலிகமுவ பகுதியில் இன்று அதிகாலை 5.20 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 25 பேர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் கேகாலை மற்றும் வரகாபொல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேகாலையில் இருந்து இரத்தினபுரி நோக்கி சென்ற தனியார் பேருந்தும், வேரகொடவிலிருந்து கேகாலை நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்துமே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளன.