மூட நம்பிக்கைக்கு ஒரு அளவே இல்லையா : போலி சாமியாரை நம்பி சிறுநீரை குடித்த மக்கள்!!

438

இந்தியாவில் அமானுஷ்ய சக்தி இருப்​ப​தாக கூறி, பக்​தர்​களை சித்​ர​வதை செய்த போலி சாமி​யார் மீது காவல்துறையினர் ​வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர்.

இந்திய மாநிலமான மகாராஷ்டிரா, சத்​ரபதி சம்​பாஜி நகர் மாவட்​டத்தில் உள்ள ஷியூர் கிராமத்தில் உள்ள கோயிலில் சஞ்​சய் பகாரே என்​பவர் சாமி​யா​ராக இருக்​கிறார். இவர் தனக்கு அமானுஷ்ய சக்தி இருப்​ப​தாக கூறி பக்தர்களை நம்ப வைத்துள்ளார்.

திருமணமாகாத பெண்களுக்கு திருமண ஏற்பாடு செய்ய முடியும் என்றும், குழந்தைப்பேறு இல்லாத தம்பதியினருக்கு அகோரி பூஜை மூலம் குழந்தை கிடைக்க வைக்க முடியும் என்றும், ஆவி​களை விரட்ட முடி​யும் என்றும் கூறியுள்ளார்.

போலி சாமியார் மூட நம்பிக்கைகளை 2 ஆண்டுகளாக பரப்பி வந்த நிலையில் தன்னை ‘பா​பா’ என்று அழைத்​துக் கொண்​டுள்​ளார். அதனை நம்பி ஏராளமான பக்தர்கள் இவரிடம் வந்துள்ளனர்.

தன்னிடம் வந்தவர்களை கம்பால் அடிப்பது, காலணி​களை வாயில் கவ்விக் கொண்டு கோயிலை சுற்றி வர சொல்வது போன்ற செயல்களை செய்துள்ளார்.

மேலும், இலை, தழைகளை உண்ண சொல்லி கட்டாயப்படுத்துவது, சிறுநீரை குடிக்க வைப்பது போன்ற இழிவான செயல்களை செய்துள்ளார்.

இந்நிலையில், மூட நம்​பிக்கை எதிர்ப்பு அமைப்பை சேர்ந்த சமூக ஆர்​வலர்​கள் சிலர், ரகசிய கமெ​ராக்​கள் மூலம் போலி சாமியார் செய்யும் செயல்களை சேகரித்து பொலிஸிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் போலி சாமியாரை கைது செய்த பொலிஸார் ​ வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​