மோட்டார் சைக்கிளில் பயணித்தவரை 22 மீற்றர் தூரம் இழுத்துச் சென்ற ரயில்!!

329

மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நபர் ரயிலில் மோதி 22 மீற்றர் தூரம் இழுத்து்ச செல்லப்பட்ட சம்பவம் இன்று புத்தளத்தில் இடம்பெற்றுள்ளது.

மதுரங்குளி கரிக்கட்டை பிரதேசத்தில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்ட வேளையில், கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கி சென்ற புகையிரத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் 22 மீற்றர் தூரத்துக்கும் இழுத்துச் செல்லப்பட்டு தூக்கி வீசப்பட்டுள்ளார்.
அத்துடன், அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் 174 மீற்றருக்கும் அப்பால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த விபத்துச் சம்பவத்தில் மதுரங்குளி விருதோடைக் கிராமத்தைச் சேர்ந்த முகம்மது நிஜாம் முகம்மது முபாஸ் (25) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம், புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

A A2