வவுனியா வீதிகளை ஆக்கிரமித்த கட்டாக்காலி மாடுகள் : மாநகரசபை எடுத்த நடவடிக்கை!!

1657

வவுனியா மாநகரசபையினால் வீதிகளில் நடமாடித்திரிந்த 60க்கு மேற்பட்ட கட்டாக்காலி மாடுகள் நேற்று (26.07.2025) இரவு பிடிக்கப்பட்டன.

வவுனியா மாநகர எல்லைக்குட்பட்ட வீதிகளில் இரவு மற்றும் பகல் வேளைகளில் நடமாடும் கால்நடைகளால் அதிகளவான விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றன.

இதனையடுத்து மாநகரசபைக்குள்ள அதிகாரங்களை கொண்டு மாநகர முதல்வரின் உத்தரவிக்கமைய கால்நடைகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் வீதிகளில் பொது போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற 60க்கும் மேற்பட்ட கால்நடைகள் மாநகர சபையினரால் பிடிக்கப்பட்டது.

எனவே கால்நடை உரிமையாளர்கள் தமது கால்நடைகளுக்குரிய அடையாளத்தினை உறுதிப்படுத்தியபின் தண்டப்பணத்தினைச் செலுத்தி அவற்றை மீளப்பெற்றுச்செல்லுமாறு சபையினால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

10 நாட்களுக்குள் உரிமை கோரப்படாத கால்நடைகள் பகிரங்க ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகரசபை அறிவித்துள்ளது.