நள்ளிரவில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் பலி : நால்வர் படுகாயம்!!

1084

ரம்புக்கன – ஹதரலியத்த வீதியின் லினியா ஹெல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காயமடைந்துள்ளனர்.

நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிக பாரத்தை ஏற்றிச் சென்ற லொறி, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு லொறி மற்றும் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.