தேரில் திருவீதியுலா வந்த நல்லூர்க் கந்தன்!!

373

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் ஆலய தேர்த்திருவிழா இன்று காலை நடைபெற்றது. நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவம் கடந்த 1ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இதன் இருபத்திநான்காம் திருவிழாவான தேர்த்திருவிழாவான இன்று, காலை 06.15 அளவில் வசந்த மண்டப பூஜை நடைபெற்று முருகப் பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராக உள் வீதி உலா வந்து காலை 07.00 மணியளவில் தேரில் ஆரோகணித்து பக்கதர்களுக்கு அருள் காட்சி வழங்கினார்.

இன்றைய தேர்த் திருவிழாவில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

1 2 3 4 5 6 7