வவுனியா ஸ்ரீராமபுரம் ஸ்ரீ நடன முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் நேற்று முன்தினம் (23.08.2014) ஆரம்பமாகியது.
தொடர்ந்து 10 தினங்கள் ஆலயத்தில் பூஜைகள் இடம்பெற்று 3ம் திகதி பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தில் இருந்தது காவடிகள், பாற்செம்பு, தீச்சட்டி என்பன ஸ்ரீ நடன முத்துமாரி அம்மன் ஆலயத்தை வந்தடையும். தொடர்ந்து ஆலயத்தில் கலை நிகழ்வுகள் இடம்பெறும்.
இன் நிகழ்வுகளில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.
-மதுஜன்-