இளைஞனின் மர்ம மரணத்தால் பரபரப்பு : தீவிரமாகும் விசாரணை!!

351

ஒஹிய – உடவேரியவத்தை பகுதியில் நபர் ஒருவரின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பிரதேச கிராம உத்தியோகத்தர் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக ஹல்துமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் உடவேரியவத்தையில் உள்ள ஒஹிய விகாரைக்கு அருகில் வசிக்கும் 22 வயது இளைஞர் ஆவார்.

மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, மேலும் ஹல்துமுல்ல மற்றும் பண்டாரவளை பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.