வவுனியா பட்டாணிச்சூரில் இஸ்ஸாமிய கலாச்சார மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு!!

719

வவுனியா மன்னார் வீதி பட்டானிச்சூர்புளியங்குளத்தில் இஸ்ஸாமிய கலாச்சார மண்டபத்திற்கான அடிக்கல் நேற்று (03.08) காலை 9.30 மணியளவில் நாட்டி வைக்கப்பட்டது.

முஹதைீன் ஜூம்மா பள்ளிவாசல் நிர்வாகத்தின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், முத்து முகமது, அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்,

மற்றும் மாநகரசபை உறுப்பினர்களான அப்துல் பாரீ, ஏ.ஆர்.எம் லறீப், பாறூாக் பர்ஷான் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். மேலும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுத்தீ்ன் வெளிநாட்டு பயணம் காரணமாக கலந்து கொள்ளவில்லை.

முஸ்ஸிம் கலாச்சார மண்டபத்திற்கான முதலாவது அடிக்கலினை பிரதி அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் ஆகியோர் இணைந்து வைத்தமையுடன்,

இரண்டாவதாக மாநகரசபை உறுப்பினர்களும் மூன்றாவதாக பள்ளிவாசல் சார்ந்தோர் என பலரும் தொடர்ச்சியாக அடிக்கலை பலரும் நாட்டி வைத்திருந்தனர்.

இக் கலாச்சார மண்டபம் அமையும் இடமானது பல வருடங்கள் பல்வேறு சர்சைகளுக்கு மத்தியில் தற்போது உரிய ஆவணங்கள் மற்றும் அனுமதிகளுடன் அமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.