இங்கிலாந்தில் சகோதரியின் மகள்களைக் காப்பாற்ற தன் உயிரைவிட்ட இலங்கைத் தமிழர்!!

1610

இங்கிலாந்து நாட்டில் வேல்ஸில், தன் சகோதரியின் மகள்களைக் காப்பாற்றுவதற்காக அருவி ஒன்றிற்குள் குதித்த இலங்கைத் தமிழர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிள்ளைகளை மீட்டுக் கரை சேர்த்த நிலையில், தான் தண்ணீருக்குள் சிக்கிக்கொண்டுள்ளார்.மறுநாள் அவரது உயிரற்ற உடலை மீட்புக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

2023ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி, வேல்ஸிலுள்ள Swanseaயில் வாழ்ந்துவந்த மோகன் என்னும் மோகனநீதன் முருகானந்தராஜா (27), தன் உறவினர்களுடன் Brecon Beacons என்னுமிடத்துக்கு புலம்பெயர்ந்து சென்றுள்ளார்.

இந்தநிலையில், அவரது குடும்பத்தினர் பலர் அங்குள்ள அருவியில் விளையாடிக்கொண்டிருக்க, சிறிது நேரத்தில் அவரது சகோதரியின மகள்கள் இருவர் தண்ணீரில் தத்தளித்த நிலையில் அவர்களைக் காப்பாற்ற தண்ணீருக்குள் இறங்கியுள்ளார்.

தன் சகோதரி மகள்கள் இருவரையும் தண்ணீரில் தத்தளித்த மற்ற உறவினர்களையும் மீட்டு கரை சேர்த்த மோகன், தானே தண்ணீரில் சிக்கிக்கொண்டுள்ளார். மாயமான மோகனை மீட்கும் முயற்சி தோல்வியடைந்த நிலையில் மறுநாள் மீட்புக் குழுவினர் அவரை சடலமாக மீட்டுள்ளனர்.