
இலங்கையின் 24 வயதான பெண் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் கீழ் இந்திய குடிவரவுத்துறை அதிகாரி ஒருவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தின் அதிகாரி ஒருவரே ஹைதராபாத் பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
சத்தீஸ்கரில் அமைந்துள்ள நிலையம் ஒன்றில் இளங்கலை இசைப் பட்டம் பயின்று வரும் 24 வயதான இந்த இலங்கை பெண், 2025 ஆகஸ்ட் 3ஆம் திகதி, இலங்கையில் இருந்து விமான நிலையத்துக்கு வந்தபோது, குறித்த அதிகாரி அவரை பின்தொடர்ந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த நேரத்தில் கடமையில் இருந்த அதிகாரி, பயண ஆவணங்களை சரிபார்த்த நேரத்தில் இருந்து தம்மை அவர் பின்தொடர்ந்ததாக இலங்கை பெண், பொலிஸில் முறையிட்டுள்ளார்.





