யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் விபத்து : ஆறு பேர் காயம்!!

996

கண்டி- யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று வியாழக்கிழமை (07.08.2025) இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தின் போது வாகனத்தில் 8 பேர் பயணித்துள்ள நிலையில் அவர்களில் சாரதி உட்பட ஆறு பேர் காயமடைந்து அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் மத்துகம பகுதியில் இருந்து யாத்திரைக்கு வந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். வாகனத்தின் பின் சக்கரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.