வவுனியா வடக்கில் கிரவல் அகழ்ப்பு நடவடிக்கை தவிசாளரின் தலையீட்டில் உடனடியாக நிறுத்தம்!!

1841

வவுனியா வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட நெடுங்கேணி சூடுவெந்தான் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட கிரவல் குவாரியின் செயற்பாடுகள் தவிசாளர் கிருஷ்ணவேணி திருநாவுக்கரசு தலையீட்டினால் உடனடியாக மறுஅறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த கிரவல் குவாரிக்கு தவிசாளர் உள்ளிட்ட குழுவினர் திடீர் விஜயமென்றினை முன்னெடுத்திருந்தனர். இதன் போது பிரதேச சபையின் கோரிக்கைகளை மீறி குவாரியின் செயற்பாடுகள் இடம்பெற்றமையினால் மறு அறிவித்தல் வரை கிரவல் குவாரியின் செயற்பாட்டை நிறுத்தி வைக்குமாறு தவிசாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளமையுடன் தொடர்ச்சியாக அனுமதியின்றி கிரவல் அகழ்வு செயற்பாடு முன்னெடுக்கப்படுமாகவிருந்தால் அவர்கள் மீது சட்டநடவடிக்கையினை முன்னெடுப்பதுடன் அவர்களின் உரிமமும் இரத்துச்செய்யப்படும் என தவிசாளர் தெரிவித்துள்ளார்.