வவுனியாவில் இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை : 3065 பேர் பரீட்சைக்கு தகுதி!!

2308

தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சை நாடுமுழுவதும் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது. அந்தவகையில் வவுனியா வடக்கு வலயத்தில் 503 மாணவர்களும்,

தெற்கு வலயத்தில் 2562 பேரும் என 3065 மாணவர்கள் இம்முறை பரீட்சைக்கு தோற்றுகின்றனர். அவர்களுக்காக 44 பரீட்சை மத்திய நிலையங்களும்,19 இணைப்புக்காரியாலங்களும் அமைக்கப்பட்டிருந்தது.

இதேவேளை நாடளாவிய ரீதியில் புலமைபரிசில் பரீட்சைக்கு சுமார் 3இலட்சத்து 7ஆயிரத்து951 மாணவர்கள் இன்றையதினம் தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.