தென்னாபிரிக்க நாட்டில் விவசாயி ஒருவரை இரண்டு நபர்கள் ஆரஞ்சுப் பழத்தால் அடித்து கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஆழ்த்தியுள்ளது.
தென்னாபிரிக்காவின் லிம்பா மாகாணத்தில் 38 வயது விவசாயி ஒருவருடன், இரண்டு நபர்கள் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். சண்டை பெரிதும் முற்றியதால் இந்த இரண்டு நபர்கள் பக்கத்தில் உள்ள ஆரஞ்சு மரத்தில் இருந்து பழங்களை பறித்து சரமாரியாக அவர் மீது வீசியுள்ளனர்.
இதனை அடுத்து விவசாயி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் பொலிசார் இரு நபர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். விவசாயின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.