
கேரள பெண் ஷார்ஜாவில் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பில், அவரது கணவர் விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம் கேரளாவைச் சேர்ந்த அதுல்யா (29) என்ற திருமணமான பெண் ஷார்ஜாவில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.
இதுதொடர்பில் அவரது கணவர் சதீஷ் (40) மீது குற்றம்சாட்டப்பட்டது. அவர் வரதட்சணை கொடுமை செய்ததாகவும் புகார் பெற்றோர் தரப்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில் சதீஷ் ஷார்ஜாவில் இருந்து விமானம் மூலம் கேரளாவுக்கு திரும்பியுள்ளார்.
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவரை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





