
வவுனியா சின்னடம்பனில் யானை தாக்கியதில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், செவ்வாய்க்கிழமை (12.08.2025) தொழில் நிமித்தமாக தனது துவிச்சக்கர வண்டியில் சின்னப்படம்பன் வீதியின் ஊடாக பயணித்த வேளையிலேயே யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

சம்பவத்தில் பெரியமடு, நெடுங்கேணியினை சேர்ந்த 61 வயதுடைய நாகேசு தெய்வேந்திரன் என்பவரே படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





