100 புலம்பெயர்ந்தோருடன் கவிழ்ந்த படகு : இத்தாலியில் துயர சம்பவம்!!

565

இத்தாலி – லம்பேடுசாவுக்கு அருகில், சர்வதேச கடல் பகுதியில் 100 புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காணாமல் போயுள்ளனர் என்று இத்தாலிய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் உயிர் பிழைத்த சுமார் அறுபது பேர் கரைக்கு அழைத்து வரப்பட்டதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் மேலும் உயிர் பிழைத்தவர்களை அதிகாரிகள் தேடி வருகின்றனர். அதிக சுமைக் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.