பாலத்தின் மேல் குழந்தையை வைத்து விட்டு ஆற்றில் குதித்த தம்பதி!!

1132

பாலத்திம் மேல் குழந்தையை வைத்து விட்டு, தம்பதியர் இருவரும் தற்கொலைச் செய்துக் கொள்வதற்காக பாலத்தின் மீதிருந்து ஆற்றில் குதித்த சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம், தார் மாவட்டத்தில், குஜராத்தில் இருந்து பேருந்தில் வந்திறங்கிய தம்பதியர் கைக்குழந்தையுடன் சிறிது தூரம் நடந்து சென்று, ஒரு பாலத்தின் அருகே நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தனர்.

சிறிது நேரம் கழித்து குழந்தையை பாலத்தில் வைத்து விட்டு திடீரென ஆற்றில் குதித்து விட்டனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து குழந்தையை தூக்கிக் கொண்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

குழந்தையை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. காட்சிகளை ஆய்வு செய்த போது,

குழந்தையின் தந்தை அருகில் உள்ள கடைக்கு தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக செல்வதை காட்டுகிறது. அப்போது பாலத்தின் அருகே குழந்தையும், தாயும் அவருக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பின்னர் அவர் வந்ததும் குழந்தையை விட்டுவிட்டு இருவரும் தண்ணீரில் குதித்துள்ளனர். இது குறித்து அறிந்த மீட்பு படையினர் உடனடியாக தேடுதல் வேட்டையை ஆரம்பித்த போது இரவு நேரம் ஆகியதால் சிறிது சிரமம் ஏற்பட்டது.

அதனால் மறுநாள் காலை மாநில பேரிடர் மீட்புக் குழு மீட்பு பணியில் இணைந்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். இருப்பினும் தம்பதியர் குறித்து எந்த ஒரு தடயமும் இதுவரை கிடைக்கவில்லை.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தம்பதியினர் இருவரும் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தையை தவிக்க விட்டு தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.