மதம் மாற வற்புறுத்திய காதலன் : உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு காதலி எடுத்த விபரீத முடிவு!!

1231

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கோதமங்கலம் பகுதியில் வசித்து வரும் இளம்பெண் வயது 21 . இவர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்து வந்தார். இவருக்கும் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வரும் ரமீசும் காதலித்து வந்தனர்.

இந்நிலையில் ஆகஸ்ட் 9ம் தேதி இளம்பெண் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு இளம்பெண் எழுதிய கடிதத்தை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அந்த கடிதத்தில் ரமீஸ் வீட்டிற்கு அழைத்துச் சென்று உல்லாசம் அனுபவித்தார். அத்துடன் என்னை மதம் மாற கட்டாயப்படுத்தியதால் நான் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு ரமீஸ் தான் காரணம் என எழுதியிருந்தார்.

இதனையடுத்து ரமீஸ் மீது தற்கொலைக்குத் தூண்டியது, பாலியல் வன்கொடுமை ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.