இரு பேரூந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து : ஒருவர் பலி : 22 பேர் காயம்!!

1206

மொனராகலை, வெலியாய பகுதியில் தனியார் பஸ் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 22 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து சனிக்கிழமை (16) இடம்பெற்றுள்ளது. விபத்தில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சாரதியே உயிரிழந்துள்ளார்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.