வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் போராட்டம்!!

483

Kaanaamal

காணாமல்போனவர்களை கண்டுபிடித்து தருமாறு கோரி அவர்களின் உறவினர்கள் பெரும் போராட்டமொன்றை நடத்த திட்டமிட்டு வருகின்றனர்.

எதிர்வரும் 30ஆம் திகதி வவுனியாவில் இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது. எதிர்வரும் 30 ஆம் திகதி சர்வதேச காணாமல்போனோர் தினமாகும். இந்த தினத்தில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் காணாமல்போனோரின் உறவுகளை ஒன்றிணைத்து இந்த போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு பிரஜைகள் குழுக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வில் வவுனியா பஸ் நிலையத்தில் இருந்து வவுனியா நகரசபை வரை பேரணியும் அதனைத் தொடர்ந்து அங்கு பொதுக் கூட்டமும் இடம்பெறவுள்ளது.

இக்கூட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பொறுப்பு கூறவேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டு ஜனாதிபதிக்கும் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளும் அனுப்பிவைக்கப்படவுள்ளது.