வயல்வெளியில் ஆடையின்றி கிடந்த சடலத்தால் பரபரப்பு!!

2700

பதுளை, கைலகொட முதியோர் இல்லத்திற்கு அருகிலுள்ள வயல்வெளியில் இன்று (18) காலை மர்மமான முறையில் இறந்த ஒருவரின் சடலம் ஆடையின்றி கண்டெடுக்கப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வயலின் உரிமையாளர் வயலுக்கு வந்தபோது குறித்த நபரின் உடலைக் கண்டு, பின்னர் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார்.

பதுளை பொலிஸ் அதிகாரிகள் சம்பவம் குறித்து முதற்கட்ட விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். இறந்தவர் சுமார் 65 வயதுடைய ஒருவராக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய பதுளை பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.