நாய் கடித்ததில் 4 மாதங்களாக போராடிவந்த 4 வயதுச் சிறுமி பரிதாபமாக பலி!!

557

இந்தியா முழுவதும் பல பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் தவணாகெரே மாவட்டத்தில் பெற்றோருடன் வசித்து வந்தவர் 4 வயது சிறுமி கதீரா பானு.

இவர் ஏப்ரல் 24ம் தேதி வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, தெருநாய் தாக்கி அவரது முகம் மற்றும் உடல் பல இடங்களில் கடித்து படுகாயம் ஏற்படுத்தியது.

உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் பெங்களூரு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து 4 மாதங்களாக உயிருக்கு போராடிய நிலையில் இறுதியில் சிகிச்சை பலனின்றி பரிதமமாக உயிரிழந்தார்.

சமீபத்தில் நாய் கடித்து ரேபிஸ் நோய் காரணமாக இறப்பு அதிகரித்து வருவதால், அனைத்து தெருநாய்களையும் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து பாதுகாப்பான தங்குமிடங்களுக்கு மாற்ற வேண்டும் எனறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. நாய்களுக்கு கருத்தடை, தடுப்பூசி, மற்றும் கண்காணிப்பு கட்டாயம் எனவும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.