வவுனியாவில் கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் கண்காட்சியும் விற்பனையும்!!

324

வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட அபிவிருத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் கண்காட்சி, விற்பனை நிகழ்வுகள் நேற்று (26.08) வவுனியா உள்வட்ட வீதியில் உள்ள பலநோக்கு பயிற்சி மண்டபத்தில் இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி எஸ்.மேகநாதன், வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா ஆகியோர் இணைந்து இக் கண்காட்சியையும் விற்பனை நிகழ்வையும் ஆரம்பித்து வைத்தனர்.

இக் கண்காட்சி நிகழ்வில் அதிகளவிலான மக்கள் கலந்து கொண்டு பார்வையிட்டனர். கண்காட்சியின் போது சிறந்த உற்பத்திப் பொருட்களை உற்பத்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

1 2 3