
யாழில் உறக்கமின்மை காரணமாக மூதாட்டி ஒருவர் இன்று (23.08.2025) காலை தவறான முடிவெடுத்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியைச் சேர்ந்த புஸ்பவதி விஜயரட்ணம் (வயது 75) என்பவரே தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மூதாட்டி உறக்கமின்மையால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று காலை தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.





