
இலங்கை சாரணர் சங்கத்தின் வவுனியா மாவட்ட கிளையின் சாரணர் அணித்தலைவர்களுக்கான 03 நாள் வதிவிட தலைமைத்துவ பயிற்சி பாசறை வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில் 22.08.2025 (வெள்ளிக்கிழமை) தொடக்கம் 24.08.2025 (ஞாயிற்றுக்கிழமை) வரை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

மாவட்ட ஆணையாளர் தலைமையில் இடம்பெற்ற தலைமைத்துவப் பயிற்சியில் வவுனியா மாவட்டத்திலுள்ள 14 பாடசாலைகளிலிருந்து 169 சாரணர் மாணவர்கள் பங்குபற்றியுள்ளதுடன் வவுனியா மாவட்ட சாரணர் சங்கத்தினர், உதவி மாவட்ட ஆணையாளர்கள், சாரணர் பொறுப்பாசிரியர்களும் பங்குபற்றியிருந்தனர்.

சாரணர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிகள் தலைமைத்துவம், வன்முறையற்ற தொடர்பாடல், தொழில் வழிகாட்டல், ஆளுமை வழிகாட்டல் போன்ற பல்வேறு திறன்களை மேம்படுத்துகின்றன.






