நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

1016

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 01 ஆம் திகதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 15 இலட்சத்து 47 ஆயிரத்து 257 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இவ்வாண்டில் அதிகளவான சுற்றலுாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 320,702 ஆகும்.

மேலும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 149,809 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 118,599 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 96,394 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 90,220 சுற்றுலாப் பயணிகளும்,

பிரான்ஸிலிருந்து 82,561 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 67,135 சுற்றுலாப் பயணிகளும், நெதர்லாந்திலிருந்து 47,213 சுற்றுலாப் பயணிகளும், அமெரிக்காவிலிருந்து 43,185 சுற்றுலாப் பயணிகளும்,

பங்களாதேஷிலிருந்து 39,828 சுற்றுலாப் பயணிகளும், இத்தாலியிலிருந்து 36,312 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.