
செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனிதப் புதைகுழிகளிக்கானதும் நடைபெற்ற இனப்படுகொலைக்குமான சர்வதேச நீதி கோரிய கையெழுத்து போராட்டம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட உபதலைவர் பாலச்சந்திரன் சிந்துஜன் தலைமையில் நேற்று(29.08.2025) காலை 8.30 மணிமுதல் 10 மணிவரையில் வவுனியா நெளுக்குளம் பகுதியில் இடம்பெற்றது.

தமிழ் தேசிய கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து சர்வதேச நீதி கோரிய மேற்படி கையெழுத்து போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் பா.பாலேந்திரன், உறுப்பினர்களான கே.தர்சினி, வீ.ஶ்ரீதரன், குகன் ஆகியோருடன் கட்சிகளின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டு தமது எழுத்துமூலமான எதிர்ப்பினை தெரிவித்து கோரிக்கையை வலுப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.






