மோட்டார் சைக்கிள் விபத்து : வயலுக்குள் விழுந்து சேதம்!!

524

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பச்சநூர் பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாதையைவிட்டு விலகி அருகிலுள்ள வயலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் மூதூர் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த விபத்துச் சம்பவம் வெள்ளிக்கிழமை (29) பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்தவர் மூதூர் பகுதியைச் சேர்ந்த யோகநாதன் (வயது 42) என தெரியவருகிறது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.