தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக நல்ல இடத்தை பிடிக்க போராடிக்கொண்டு இருந்தவர் கிருஷ்ணா. இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த யாமிருக்க பயமே இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது.
தற்போது இவரும், தொலைக்காட்சி பிரபலம் மா.கா.பாவும் இணைந்து நடித்த வானவராயன் வல்லவராயன் படம் வெளிவரயிருக்கிறது. இதில் மா.கா.பாவின் காட்சிகள் அதிகம் இருப்பதால் கிருஷ்ணா சில காட்சிகளை கட் செய்ய கூறியுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
நல்ல நண்பர்களாக இருந்த இவர்களுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் படக்குழு முழித்து வருகிறாராம்.