கார்த்திக்கிடம் இருந்து பல கோடி சொத்துக்கள் பறிப்பு : அதிர்ச்சியில் திரையுலகம்!!

424

Karthik

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90 களில் காதல் நாயகனாக வலம் வந்தவர் கார்த்திக். இவர் சினிமாவில் நடிப்பதை விட்டு நீண்ட இடைவேளைக்கு பிறகு ராவணன் படத்தில் நடித்தார்.

தற்போது அனேகன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் நேற்று அவரது சொந்த வீட்டில் இருந்து அவரை வெளியேறும் படி அவர் சொந்தகாரார்கள் சொல்ல, விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது.

கார்த்திக்கை ஏமாற்றி அவரது உறவினர்கள் பல கோடி ரூபாயை அபகரித்து விட்டதாக அவரது தரப்பில் கூறப்படுகிறது. பத்திரத்திலும் கார்த்தியின் பெயர் இல்லை. இதே வீட்டில் தான் கார்த்திக் பல வருடங்களாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் தமிழ் திரையுலகத்தினர் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.