பிரபல நடிகைக்கு 102 கோடி அபராதம்!!

438

தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக நடிகை ரன்யா ராவுக்கு வருவாய் புலனாய்வு இயக்குநரகம் அவருக்கு ரூ.102.55 கோடி அபராதம் விதித்துள்ளது.

மார்ச் 3 ம் தேதி துபாயிலிருந்து பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் வழியாக 14.2 கிலோ தங்கத்தை சட்டவிரோதமாக கொண்டு வந்ததாக அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், அவருடன் மூன்று பேர் மீதும் மொத்தம் ரூ.270 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

அபராதம் செலுத்தப்படாவிட்டால், அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்தப்படாவிட்டால், ரன்யா ராவின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம் எனக் கூறியுள்ளது.