சூதாட்ட நிலையமொன்றை சுற்றி வளைத்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்!!

287

Attack

சூதாட்ட நிலையமொன்றை சுற்றி வளைத்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிலாபம், முன்னேஸ்வரம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் ஓர் இடம் பற்றி கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து பொலிஸார் அந்த இடத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

இதன் போது சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தில்ருக் என்ற பொலிஸ் இன்ஸ்பெக்டர் காயமடைந்துள்ளார்.

சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரும் மோதலில் காயமடைந்துள்ளார். காயமடைந்த இருவரும் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திலிருந்த ஏனையவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.