தமிழர் பகுதியொன்றை துயரில் ஆழ்த்திய பாடசாலை மாணவனின் மரணம் : கதறும் குடும்பம்!!

1174

திருகோணமலை – கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதவாச்சி குளத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் எனவும் தெரியவந்துள்ளது.

நேற்று வழமை போல் நண்பர்களுடன் குளத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும்,மரணம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்தனர்.