
யாழ் (Jaffna) பலாலி விமான நிலையம் உடலில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்திய பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொழும்பை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு தங்கத்தை கடத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
விசாரணை

குறித்த பெண் இந்தியாவில் இருந்து தங்கத்தை கடத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இந்தநிலையில், யாழ். பலாலி விமான நிலைய அதிகாரிகளின் சோதனையில் ஈடுபட்டபோது தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சையளிக்கப்பட்ட பின் கடத்தப்பட்ட தங்கத்தை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





