
தாய்லாந்தில் நடைபெறவுள்ள 12வது Miss Grand International – 2025 அழகிப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி திஷானி பெரேரா என்ற பெண் ஒருவர் பங்குபற்றவுள்ளார்.

இந்த அழகிப் போட்டியில் பங்குபற்றுவதற்காக திஷானி பெரேரா என்ற பெண் இன்று திங்கட்கிழமை (29.09.2025) அதிகாலை 1:30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தாய்லாந்து நோக்கி புறப்பட்டுள்ளார்.

இந்த அழகிப் போட்டியில் 100 இற்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் கலந்துகொள்கின்றனர். இந்த அழகிப் போட்டின் சுற்றுக்கள் தாய்லாந்தின் பேங்கொக் நகரத்தில் செப்டம்பர் 30 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 18 வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





