
வவுனியா – முல்லைத்தீவு உட்பட்ட சில மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை, இன்று (03.10.2025) இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, குறித்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், மின்னல் அபாயங்களைக் குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.





