இலங்கையில் பறவை மோதி சேதமடைந்த விமானம் : பயணிகளுடன் மீண்டும் இயக்கியதால் பரபரப்பு!!

487

இலங்கையில் பறவை மோதி சேதமடைந்த விமானத்தை பயணிகளுடன் விமானி மீண்டும் சென்னை வரை இயக்கியதால் பரபரப்பு எற்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து கொழும்புக்கு 158 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் AI 287பறவை மோதி தனது பயணத்தை தொடங்கியுள்ளது.

இதனையடுத்து விமானம் கொழும்பு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு பொறியாளர்களால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், விமானத்தின் இயந்திரங்களில் பறவையின் சடலமொன்று சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அதே விமானம் அதிகாலை 3:20 மணிக்கு கொழும்பிலிருந்து 147 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களை ஏற்றிக்கொண்டு மீண்டும் சென்னை திரும்பி பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது.

இருப்பினும், ஏர் இந்தியா மற்றும் சென்னை விமான நிலைய பொறியாளர்கள் குழு விமானத்தை முழுமையாக ஆய்வு செய்தபோது விமானத்தின் நிலைமை மோசமடைந்துள்ளதினை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், இதற்கு பதிலளிக்கும் விதமாக, விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.