கார் மீது மரக்கிளை முறிந்து விழுந்து விபத்து!!

431

காலி வீதியில் இரத்மலானை பகுதியில் உள்ள இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்துக்கு முன்பாக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த கார் மீது மரக்கிளை முறிசந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று புதன்கிழமை (08.10.2025) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து மொரட்டுவை நோக்கிப் பயணித்த கார் மீதே மரக்கிளை முறிந்து விழுந்துள்ளது.

எவ்வாறிருப்பினும் விபத்தின் போது எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.