காதலனுடன் சண்டை கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!!

331

சென்னை ஆலந்தூரில், முதலாண்டு கல்லூரி படித்து வந்த மாணவி, காதலனுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், மன அழுத்தத்தில் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆலந்தூர், மடிப்பாக்கம் அருகே உள்ளாகரம் அலெக்ஸ் தெருவை சேர்ந்த வசந்தா (40) மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்றுகிறார். இவரது மகள் தமிழ்ச்செல்வி (17) தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு பி.காம் படித்து வந்தார்.

இந்நிலையில் வேலைக்கு சென்ற வசந்தா மாலை வீட்டிற்கு திரும்பி கதவை தட்டிய போது, தமிழ்ச்செல்வி கதவை திறக்கவில்லை. நீண்ட நேரம் பதிலளிக்காததால்,

அக்கம்பக்கத்தினரைச் சேர்த்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்ததில், தமிழ்ச்செல்வி மின்விசிறியில் தூக்கிட்டு சடலமாக தொங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியில் கதறி அழுதார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மடிப்பாக்கம் காவல் நிலைய போலீசார் தமிழ்ச்செல்வியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் மாணவி அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. காதலர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்திருக்கலாம் என தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.