சொல்லிக் கொடுப்பது எதுவுமே புரியவில்லை : கல்லூரி மாணவி விபரீத முடிவு!!

382

தெலுங்கானா மாநிலம் எல்கதுர்த்தி அருகே கோபால்பூர் கிராமத்தை சேர்ந்த கிருபாகர் என்பவரின் மகள் கீர்த்தனா (19), ஐதராபாத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் முதல் ஆண்டு படித்து வந்தார்.

கல்லூரி விடுதியில் தங்கி வந்த அவர், கற்பிக்கும் பாடங்கள் புரியவில்லை என அடிக்கடி பெற்றோரிடம் வருத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனஅழுத்தத்துடன் இருந்து வந்த கீர்த்தனாவை பெற்றோர், கல்லூரி விடுமுறையில் வீட்டிற்கு வரவழைத்து, வேறு கல்லூரியில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்த கீர்த்தனா, நேற்று திடீரென தன் அறைக்குள் சென்றார். நீண்ட நேரம் ஆகியும் வெளியில் வராததால் கதவை உடைத்து பார்த்த போது, அவர் தூக்கிட்டு உயிரிழந்தது தெரிய வந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் தகவலளித்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இளம் வயதில் கல்வி அழுத்தத்தால் உயிரிழந்த கீர்த்தனாவின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.